Tuesday, March 24, 2009

IPL or EPL

போன வருடம் ஏதோ கிரிக்கெட்டின் நலனை கருதியும், கிரிக்கெட்டின் வள்ர்ச்சிக்காகவும் கூறி தொடங்கப்பட்ட தாக கூறப்படும் IPL எனப்பரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தற்சமயம் தேசிய நலனுக்கே சவால் விடுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நூற்றியிருபது கோடி மக்கள் பங்கு பெறும் இந்திய நாட்டின் தேர்தலுடன் போட்டி போடுகிறது. மும்பை தாக்குதலுக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாயிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் சமயத்தில் போட்டிகளை நட்த்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் அடம் பிடிப்பதில் சிரிக்கெட்டின் நலனை விட பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவே தொடங்கப்பட்டதாக கூறி, இந்தியன் ப்ரீமியர் லீக் என பெயர் வைத்து விட்டு இங்கிலாந்திலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ நடத்துவதால் எப்படி இந்திய கிரிக்கெட் வளர்ச்சி காண முடியும். தேர்தல் நடக்கும் நாட்களில்தானே பாதுகாப்பு தரமுடியாது என்று மாநிலங்கள் மறுத்துள்ளன. அதனால் போட்டிகளின் எண்ணிக்கைகளை குறைத்து (லாபத்தில் கொஞ்சம் குறையும்) மற்ற நாட்களில் நடத்தலாமே.

1 comment: