Saturday, April 4, 2009

அலங்கோலங்கள்

சமீபத்தில் கிரி என்பவர் தன்னுடைய வலைப்பதிவில் தொலைக்காட்சி சீரியல்களை பற்றி குறிப்பாக (அலங்)கோலங்கள் மற்றும் அரசியை பற்றி மிகவும் நொந்து போயிருந்தார். அதில் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் ரொம்ப படுத்துவதாக வருந்தியிருந்தார். நான் அரசி பார்ப்பதில்லை. ஆனால் அவ்வப்போது சிலவற்றை, அடிக்கடி கோலங்களை பார்க்க நேரிடுவதுண்டு . ஆதி, மேனகா & தோழர் பேசும் தமிழ் கொடுமை ஓரு பக்கம்னா, கதையோட (அப்படி ஒண்ணு இருக்கா?) போக்கு அதை விட படுத்துகிறது.

ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கை கதையாக ஆரம்பித்தது எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது. நாம் பெருமையாக நினைக்கும் நமது குடும்ப அமைப்பை இந்த சீரியல்கள் காட்டும் விதமிருக்கிறதே. அப்பப்பா......சீரியல்களில் வரும் உறவுகள் பழகும் பாசமென்ன......அதுவும் பெண் உறவுகள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அடுத்தவர்களை நிம்மதி வாழ்ந்து விடக்கூடாதே என்றுதான் அவர்கள் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமா.....எல்லா சீரியல்களிலுமே எந்த பெண்ணுக்குமே (குறிப்பாக முக்கியமான பாத்திரங்கள்) சந்தோஷமான குடும்ப வாழ்க்கை இருக்காது. கோலங்களில் அபியும் சரி அவளுடைய தங்கச்சிகளுக்கும் அவர்களின் அம்மாவுக்கும் குடும்ப வாழ்க்கை சரி கிடையாது.
ஆதி பெரிய பிஸினஸ் புள்ளியாம், ஆனால் அவனுக்கோ டென்ஷன் ஆகி கத்துவதையும், அபியை பழி வாங்குவதையும் தவிர வேற வேலையே கிடையாதா?????

இப்படி ஒவ்வொன்றாக பார்த்தால் தலை சுற்றுவது மட்டுமில்லை, கொலை வெறிதான் வருகிறது. பின் நீ ஏன் பார்க்கிறாய் என் நீங்கள் கேட்கலாம். எப்பவாவது பார்க்கும் எனக்கே இப்படி என்றால் இந்த பெண்கள் எப்படித்தான் நாள் முழுவதும் இந்த கருமங்களை பார்ப்பது மட்டுமில்லாமல் தாங்கள் ச்ந்தித்து கொள்ளும் போதெல்லாம் அதை பற்றி டிஸ்கஷன் செய்கிறார்களோ??

Tuesday, March 24, 2009

IPL or EPL

போன வருடம் ஏதோ கிரிக்கெட்டின் நலனை கருதியும், கிரிக்கெட்டின் வள்ர்ச்சிக்காகவும் கூறி தொடங்கப்பட்ட தாக கூறப்படும் IPL எனப்பரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தற்சமயம் தேசிய நலனுக்கே சவால் விடுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நூற்றியிருபது கோடி மக்கள் பங்கு பெறும் இந்திய நாட்டின் தேர்தலுடன் போட்டி போடுகிறது. மும்பை தாக்குதலுக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாயிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் சமயத்தில் போட்டிகளை நட்த்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் அடம் பிடிப்பதில் சிரிக்கெட்டின் நலனை விட பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவே தொடங்கப்பட்டதாக கூறி, இந்தியன் ப்ரீமியர் லீக் என பெயர் வைத்து விட்டு இங்கிலாந்திலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ நடத்துவதால் எப்படி இந்திய கிரிக்கெட் வளர்ச்சி காண முடியும். தேர்தல் நடக்கும் நாட்களில்தானே பாதுகாப்பு தரமுடியாது என்று மாநிலங்கள் மறுத்துள்ளன. அதனால் போட்டிகளின் எண்ணிக்கைகளை குறைத்து (லாபத்தில் கொஞ்சம் குறையும்) மற்ற நாட்களில் நடத்தலாமே.
பாராளுமன்ற்த்திற்கு தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு எம்பிக்கள் தங்கபாலு- காங்கிரஸ் ( சேலம்), கிருஷ்ணன் – ம.தி.மு.க(பொள்ளாச்சி), வேணுகோபால் – தி.மு.க (திருப்பத்துர்), விஜயன் – தி.மு.க (நாகை) பாராளுமன்றத்தின் நடவடிக்கைக்களில் மிக முக்கியமான கேள்வி நேரத்தில் கடந்த 5 வருடங்களில் எந்த கேள்வியும் எழுப்பாமல் அரும்பணி ஆற்றியுள்ளனர். அரசியல் அரிச்சுவடி தெரியாமலேயே எம்பி ஆகி விட்ட ராதிகாசெல்வி கூட தான் எம்பி ஆனபின் அமைச்சர் ஆவதற்கு முன் நான்கு கேள்விகள் கேட்டுள்ளார். ஓருவேளை தாங்கள் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளை எந்த பிரச்சனைகளுமே இல்லாத பகுதிகளாக மாற்றியிருக்கலாம் என்ற நினைப்புக்கெல்லாம் கனவில் கூட இடம் இல்லை. அதே சமயம் திரு.கார்வேந்தன் (காங்கிரஸ்) 1,175 கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மற்றொருபுறம் கேரளாவை சேர்ந்த எம்பிக்கள் நாட்டிலேயே அதிகபட்சமாக சராசரியாக 186 கேள்விகள் கேட்டு முண்ணனியில் உள்ளனர். இதில் தேசிய சராசரியே 169தான். மேலும் சராசரியாக பாராளுமன்றத்தில் 67 விவாதங்களில் (தேசிய சராசரியோ வெறும் 30தான்) பங்கேற்றுள்ளனர். வாழ்க நமது தமிழ் எம்பிக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1